Wednesday, September 7, 2016

13. என்னிடத்தில் (கங்கையிலே ஓடமில்லையோ )



என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர்-வர என்னை-விட்டு நீயும்-செல்ல 
உரை உரை கொஞ்சம்-உரை என்னிடத்தில் என்ன குறை (2)
என்னிடத்தில் என்ன குறை (4)
அம்மா .. அம்மா .. அம்மா ..
நானினிமேல் தாவென்று கெஞ்சுவதெங்கே
நீ ஆகாது போடா-என்றே கொஞ்சுவதெங்கே
உரை உரை கொஞ்சம் உரை என்ன குறை
நானின்னும் தாவென்று கெஞ்சுவதெங்கே
நீ ஆகாது போடா-என்றே கொஞ்சுவதெங்கே
நெய்ப்-பொங்கல் நான்-இனிமேல் தின்னுவதெங்கே
உன் அன்புக்கை இந்தாவென்று ஊட்டுவதெங்கே
உரை கொஞ்சம் உரை
உரை உரை கொஞ்சம் உரை (2)
என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர் வர என்னை-விட்டு நீயும்-செல்ல
உரை-உரை கொஞ்சம்-உரை என்னிடத்தில் என்ன குறை (2)
(MUSIC)
உன்-போலக் கொஞ்சமுண்டோ தெய்வ-சந்நிதி
உன் கண்போலே தந்திடுமோ என்றும்-நிம்மதி
உரை கொஞ்சம் உரை உரை-உரை கொஞ்சம்-உரை
உன் தாள்-தான் சேய்-எனக்கு தெய்வ சந்நிதி
உன் பின்னாலே ஏக்கமொன்றே  பிள்ளை-என் கதி
உன்னோடு போச்சுதாம்மா கொஞ்சல்கள்-எல்லாம்
உன் பின்னாலே வாழ்க்கையெலாம் கெஞ்சல்கள்-ஒன்றாம்
உரை கொஞ்சம்-உரை
உரை-உரை கொஞ்சம் உரை (2)
என்னிடத்தில் என்ன தொல்லையோ என்அன்னையே
கண்களில் நீர்-வர என்னை-விட்டு நீயும்-செல்ல
உரை-உரை கொஞ்சம்-உரை உரை-உரை கொஞ்சம்-உரை (2)
(MUSIC)
பொன்-தனச் செல்வமும் உன்-விழி யாகுமோ
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கோவென்..றழ-விழத் தாய்-மடி போலெது
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
 கொஞ்சம் எண்ணியதை உரை உரை
பாசத்தைத் தருவது அன்னை போலெது
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
யாவரும் சும்மா உன்னெதிர்-அம்மா
கொஞ்சம் எண்ணியதை உரை உரை
கொஞ்சம் எண்ணியதை உரை உரை (4)


No comments:

Post a Comment