Friday, June 11, 2021

20. அழகினும் அழகாக (திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்) **

 



அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
(2)
(MUSIC)
புகலின் புகலாக எதுவாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
(2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
 (MUSIC)
நாம் சிரித்தால் சிரிக்கும் அன்னை முகம்-நாம்
வாடிநின்றால் துடிக்கும் அவள் இதயம்
(2)
நம்-பசி தாங்காது அவள் இதயம் (2)
பிள்ளை உண்டாலே நிறைவாகும் அவள் வயிறும்  (2)
 அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
 (MUSIC)
நம்-சிறப்பே தனது வாழ்க்கை என்று-தன்
பொன்னான திருமேனி தான் இளைத்து
(2)
சளைக்காமல் எந்நாளும் தான் உழைத்து (2)
முடிவில் நினைவாக வாழ்கிறாள் உடல் விடுத்து (2)
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்
புகலின் புகலாக எதுவாகும்-நம்
அன்னையின் பாதமே அதுவாகும்
அழகினும்-அழகாக ஏதும் உண்டா என்றால்
நினைவுக்கு வரும்-அன்புத் தாயின்-முகம்


Some More





No comments:

Post a Comment