Friday, September 11, 2026

4. பெற்றவளை போல் | அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது | Petravalai | Arthamulla Indhu madham |

 



பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
அது இறையவன் திருவருளாய் எனக்களித்தது 
பாசம் கொண்ட அன்னை மனம் உனக்கு வாய்த்தது 
அதனால்  அன்னை இல்லை என்ற குறை எனக்கு மாய்ந்தது
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
கண்ணிமை போல் என் நலனை நீயும் பார்த்துக் கொண்டது 
என் அன்னை ஞாபகத்தை எனக்கு மூட்டி விட்டது 
கண் கலங்கி  என் வலியைப் பார்த்து நீயும் துடித்தது 
என் மனதில் பசுமரத்தின் ஆணி போல இருக்குது 
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
என்னவளே என் ருசிதான் உனக்கு ருசி 
அடடா ! என் வயிற்றில் தோன்றுவதே உனது பசி
என்னவெல்லாம் செய்தாய் நீ எனக்கு அம்மா !
அதற்கு முன்னாலே நான் படிக்கும் கவிகள் சும்மா 
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
எனக்கென்று சொல்லிச் சொல்லி எது வும் செய்தனையே  
Thanakkenru  என்றும் என்னை  நீ  எதுவும் கேட்டிலையே
எந்திரத்தைப் போலதினம் வீட்டில் பணி செய்தனையே
கைபிடித்த காரணத்தால் உன் நலத்தை துறந்தனையே  
உன் நலத்தை துறந்தனையே  !
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது 
அது இறையவன் திருவருளாய் எனக்களித்தது 
பாசம் கொண்ட உனது மனம் கடலைப் போன்றது 
அதிலே   எல்லாற்கும் குளிக்கும்பாக்யம் எளிதில் கிடைத்தது
பெற்றவளைப் போல் எனக்கு நீ கிடைத்தது ..!

-------------------------

Finding you—someone who is like a mother to me—

Was a gift bestowed upon me by Divine Grace.

You possess the heart of a truly loving mother;

Because of this, the void left by not having a mother of my own has vanished.

Finding you—someone who is like a mother to me—


The way you guarded my well-being, just as eyelids protect the eyes,

Evoked memories of my own mother.

The sight of you distressed and teary-eyed at the sight of my pain

Is etched in my heart, as firmly as a nail driven into fresh wood.

Finding you—someone who is like a mother to me—


My beloved, my tastes became your own;

Oh, the hunger I felt in my womb was the very hunger you shared!

The things you did for me, Mother—

All the poems I had read before pale in comparison to that;

I found a mother in you.


You did everything, always saying it was for my sake;

Never once did you ask for anything for yourself;

You toiled at home daily, like a machine;

For the sake of our union, you sacrificed your own well-being—

You sacrificed your own well-being!


Finding you—like a mother—was a blessing bestowed upon me by the Divine.

Your heart, filled with affection, is vast as the ocean;

And in it, everyone easily found the fortune to bathe.

Finding you—like a mother—was a blessing...!


SATHYA SONGS


3. எனக்காக வாழ்கின்ற | அலங்காரம் கலையாத | Enakkaaga | Alangaaram kalaiyaadha

 

எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன் 
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
நானெந்தன் தாய்-தன்னை நேராகக் கண்டேன் 
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
கண்ணே-உன் கண்-தந்த ஒரு நோக்கிலே
(MUSIC)
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை 
என் தாயும் கொண்டிட்டப் பொன்னின் நகை
கண்ணோடு நின்றாடும் உன் புன்னகை 
என் தாயும் தந்திட்டப் பொன்னின் நகை
பேரோடு உறவாடிச் செல்கின்றதல்ல 
நீ தந்த உறவந்த இறைவன் வரம் 
நீ எந்தன் குலதெய்வம் தாயின் வரம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
என்தாயும் நீ-என்று மனம் சொல்லுது 
என் தாயின் எழில்-உந்தன் கண் மின்னுது
  வந்தாள் என்தாய்-சொந்தம் என்றே என்னோடு 
எந்நாளும் இனிதாக நாம் வாழுவோம்
எந்நாளும் பிரியாமல் நாம் வாழுவோம்
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே
(MUSIC)
தலை சாய்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் தினம் 
எனைப் பார்த்துச் சிரிக்கின்ற உந்தன் முகம்
காண்கின்ற என் நெஞ்சம் சொல்லும் நிஜம் 
என் தாயைப் போலந்த ஒரு பார்வை சாட்சி  
என் தாயைப் போலுந்தன் ஒரு பார்வை சாட்சி  
சொல்கின்ற திருக்காட்சி பொய்யாகுமோ 
உயிரோடும் தாயன்பு பொய்கூறுமோ
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே 
எனக்காக வாழ்கின்ற நிலை-போச்சு என்பேன்
கண்ணே உன் முகம்-கண்ட அந்நாளிலே


SATHYA SONGS


2. எந்தன் உயிராய் உன்னை நானறிவேன் | முத்துநகையே | Endhan Uyiraai | Muthu Nagaiye

 


எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 

உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(Music)
நகமும் சதையும் போலே நாமும் இன்றுவரை நன்றிருந்திட்டோம்
இன்னும் இருக்கும் காலம் முழுதும் ஒன்றி நாமிருந்து களிப்போம் 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
(MUSIC)
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
இன்னுயிரைத் தந்தாய் நீ அவர்க்கு
அவ்விதத்தில் தந்தை சேய் உனக்கு
தன்னை விடப் பெரிதாய் பார் உனக்கு 
அது தான் நிஜமெனும் பேர் உனக்கு 
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா .. 
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை யாரறிவார் ..ஓஹோ..  ஓஹோ
(MUSIC)
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
எந்தனுயிர்த் தாய் போல் உன் பரிவு 
நெஞ்சறிந்த சேவை உன் புரிவு
வேற்றெவர்க்கும் அன்பாய் ..
(Short Music)
வேற்றவர்க்கும் அன்பாய் புன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
வேற்றவர்க்கும் அன்பாய் உன் சிரிப்பு அடடா அது ஓர் பூவிரிப்பு
(Short Music)
எந்தன் உயிராய் உன்னை நானறிவேன்  ஆஹா .. ஆஹா ..
உந்தன் உயிராய் என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்


SATHYA SONGS

1. நானும் நீயும் யுகம் பலதாண்டி | பாலும் பழமும் | Naanum Neeyum | Paalum Pazhamum

 

ம்..ம்ம் 
(SM)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
உண்ணும் உணவில் உணர்வென நீயே உறங்க வரும் என் கனவிலும் நீயே (2)
எந்தன் சொல்லினை மதிப்பவள் நீயே உந்தன் சொல்லிலும் பணிவுகொண்டாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
எஞ்சி இருக்கும் உணவு உண்டாயே எனக்கு என்றும் விருந்து தந்தாயே (2)
பஞ்சில் இருக்கும் மென்மையை நீயே உந்தன் மனமாய்க் கொண்டிருந்தாயே (2)
நானும் நீயும் யுகம் பலதாண்டி இருந்து பாங்காய் உடல் பல தாங்கி 
பிறந்து உலகில் வாழ்ந்துது போலே  இருக்கு அன்பே எனக்கு உன்னாலே
(music)
ஈன்ற தாயை நான் உன்னில் கண்டேன் உனது அன்பே நம் வாழ்வின் எல்லை (2)
எதனைக் கொடுத்தே மனம் நான் நிறைவேன் எனது கடனை அடைத்திட நானே (2)
நானும் நீயும் ஓர்மனமாகி உலக வாழ்வின் கடலினில் நீந்தி  
சோகம் எதிலும் மூழ்கிவிடாமே ஓடமானாய் குலமகள் நீயே 
ம்..ம்ம்


SATHYA SONGS

சத்யா-SATHYA


Youtube playlist of all songs


1. நானும் நீயும் யுகம் பலதாண்டி | பாலும் பழமும் | Naanum Neeyum | Paalum Pazhamum

2. எந்தன் உயிராய் உன்னை நானறிவேன் | முத்துநகையே | Endhan Uyiraai | Muthu Nagaiye 

3. எனக்காக வாழ்கின்ற | அலங்காரம் கலையாத | Enakkaaga | Alangaaram kalaiyaadha 

4. பெற்றவளை போல் | அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது | Petravalai | Arthamulla Indhu madham | 






Sunday, August 23, 2026

35.செல்லமே(மௌனமே பார்வையால்)


 
[Pallavi]
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]
[Verse 1]
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன  
அணைப்பதென்ன
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன 
அந்தக் கடவுள்  தான் தந்த வரமாய்  நான் அந்த கணத்தில் நெஞ்சில் நினைப்பதென்ன
நான் எந்தன் மனதில் என்றும் நினைப்பதென்ன
[vocal ad-lib] ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]

என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் கழிப்பேனே களிப்பேனே
என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் களிப்பேனே
எந்தன் கண்மணீ நீ தந்த இதத்தில் நான் இன்ப சாகரத்தில் மிதப்பேனே
பேரின்ப சாகரத்தில் மிதப்பேனே
ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன


OTHER SONGS




Sunday, July 26, 2026

34.ரிதுவே என் உயிர் நீதானே(நிலவே என்னிடம் நெருங்காதே)


[chorus]

ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[bridge]
புதிராய் இருப்பினும் நீ தானே-அந்த புதிரின் விடையாய் ஆனாயே
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[Instrumental interlude]
[verse 1]
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
யாருக்கும் குழந்தை சேயாகும்
நீ எனக்கொரு வகையில் தாயாகும்
உன் உறவெனக்கொரு   பேறாகும்
உன் பாட்டன் என் வாழ்க்கையின் வேராகும்
[chorus]
ரிthuவே என் உயிர் நீதானே
நீ கிடைத்தாய் எனக்கோர் குறை இல்லை
[instrumental interlude]
[Verse 2]
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
உண்மையுடன் நான் வாழ்ந்து வந்தேன்
நீ பிறந்ததும்  உனையும்  இணைத்துக் கொண்டேன்
மறைந்த பின்னாலும் இருந்திடுவேன்
உன் நினைவிலென் பாட்டாய் நிறைந்திருப்பேன்