Thursday, April 13, 2023

30. என்னைப் பிரிந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்)**

 


என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
என்னைப் பிரிந்திட்ட போதும் மண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
SM

 உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் 
என்னிடம் வந்திடம்மா அம்மா என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  music

என்னை-மடியிலே போட்டு தலையைக் கோதியே தலையைக் கோதியே
   sm
ஆசையாக பார்த்த உந்தன் கண்கள் தோன்றுதே நினைவில் தோன்றுதே
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
   மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா
  வாம்மா என்னிடம் வந்திடம்மா
  ( SM)

  ஆ...
  இரவில் நானுமே எந்தன் கண்கள் மூடியே கண்கள் மூடியே
  sm
  உறக்கம் நாடியே  புரண்டு கிடக்கும் போதிலே புரளும் போதிலே
  நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
   நானும் நீயும் வாழ்ந்த காலம் தோன்றுதே அம்மா  
பாதி தூக்கம் கூட ஓடிப் போகுதே அம்மா
  என்று நினைந்தே ஏங்கும் உனது மடியை நாடும்  
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா   வாம்மா என்னிடம் வந்திடம்மா
உன்னை நினைந்து என் நெஞ்சம் மடியை நாடிக் கெஞ்சும் என்னிடம் வந்திடம்மா அம்மா
என்னிடம் வந்திடம்மா வாம்மா என்னிடம் வந்திடம்மா


Thursday, December 22, 2022

29.உனது மடியில் புரண்ட-நாட்கள்(உனது விழியில் எனது பார்வை) **

 


உனது  மடியில் புரண்ட-நாட்கள் நெஞ்சில் தோன்றுது (2)
என் நினைவில் இன்றும் இருக்கும் அதுதான் தங்கம் போன்றது 
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

உயர்வென்று ஆயிரம் நன்று எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
உயர்வென்று ஆயிரம் நன்று .. எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
-பூமியின்-மேலே ஆண்டவன் பேர்-தான் தாயெனக்-கூறுவதோ
-உனைப் போல தெய்வம் வருமோ (2)
-உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் .. குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
என்-உடல் கொண்ட காயத்தின்-ரத்தம் அவள்-கண் வடிக்கிறது
அது தெய்வம் கொண்ட பிறப்பு (2)
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது



Tuesday, December 20, 2022

28.எனது மனதில்(உனது விழியில் எனது பார்வை)


எனது மனதில் உனது நினைவு தேனைப் போன்றது (2)
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது 
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

உனதன்புக் கண்களிரண்டில் விழி கொண்டு ஜாலம் காட்டி  
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
உனதன்புக் கண்களிரண்டில் .... விழி கொண்டு ஜாடை பேசி 
உடன் வந்து தாவியணைத்தாய் அதன் மேலும் ஸ்வர்க்கமோ
-கண்ணிமையாது உன் முகம் கண்டால் காலமும் நின்றிடுமோ 
-அது போல இன்பம் எதுவோ (2)
-எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
-என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 
(Music)

 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
 பூப் போலுன் குரலினில் என்றும் தேன்போல வார்த்தைகள் சிந்தும்
அது பாட்டன் பேரைச் சொல்லும் .. அதைக் கேட்க ஏங்கும் நெஞ்சம் 
-என்உயிர் என்றும் உன்முகம் தந்த அன்பினில் வாழ்கிறது
-அதில் இன்று எந்தன் உலகு அதில் என்றும் வந்து உலவு
எனது மனதில் ரிது உன் நினைவு தேனைப் போன்றது
என் இதயம் முழுதும் இனிக்கும் அதுவே கவிதை ஆகுது கவிதை ஆகுது 


OTHER SONGS


 

Wednesday, October 12, 2022

28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **

 


ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
(MUSIC)
பிள்ளைகள் உதைத்தும் மிதித்தும் என்றைக்கும் இதத்தைக் கொடுக்கும் (2) 
தாயை  நீ பார் 
என்றென்றும் உழைத்தே இளைத்தும் பிள்ளைக்குச் சிறப்பே கொடுக்கும் 
தந்தையைப் பார்
நிலவுபோல்  தாய் முகம் ஆக்குமே பரவசம் 
வாழ்விலே தைரியம் தந்தை தான் இது நிஜம் 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
 (MUSIC)
சென்றங்கு கண் மூடும் வரைக்கும்  என்றைக்கும் சேய் நன்மை நினைக்கும் (2) 
தாய்மையாகும்
என்றென்றும் பிள்ளைக்கே உழைக்கும் விந்தைக்கு இருக்கும் ஒரே பேர் 
தந்தையாகும் 
அன்புதான் தாய் மனம் தந்தையோ கரிசனம்
கண்டபின் வேண்டுமோ ஆண்டவன் தரிசனம்
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக



Friday, May 27, 2022

தாயென்பவள் உயர்வானவள்(காலங்களில் அவள் வசந்தம்)

 

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 

(Music)

மகற்கெனவே  தினம் ஓய்விலா 

உழைப்பொன்றினில் அவள் உயிர் மூச்சு

ஓ .. 

மகற்கெனவே  தினம் ஓய்விலா 

உழைப்பொன்றினில் அவள் உயிர் மூச்சு

உறக்கத்திலேயும் சேய் பணி (2)

மறந்திடுதிடுவாள் அவள் இல்லை

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 

 (Music)

நான் நான் என்பவள் இல்லை

அட  என் தாய் அது போல் இல்லை

நான் நான் என்பவள் இல்லை

அட  என் தாய் அது போல் இல்லை

மனம் போல் சுடுகின்ற சொல்லை

மனம் போய் சுடுகின்ற சொல்லை 

அவள் என்று சொல்லினாள் இல்லை 

தாயென்பவள் உயர்வானவள் 

தனக்கு இணை இல்லாதவள் 

சேயை இரு விழி போலவே

காத்திருப்பாள் என்றும் அவள் 

தாயென்பவள் உயர்வானவள் 



Tuesday, April 5, 2022

சுமை தாங்கி போலே(சுமை தாங்கி சாய்ந்தால்)

 

சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை 
சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை
(MUSIC)

அறிவாளியாகும் தன் பிள்ளை என்றே (2)
பல கல்வி தேடிக் கொடுப்பாரே தந்தை 
விலை-கோடிக் கோடித் தந்தாலும் ஈடு
இணையும் இராது அவர் அன்பின் மேரு 
சுமை தாங்கி போலே தான் அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை 
(MUSIC)

அவர்-பாதம் ஒன்றே அருளாதோ-மாட்சி (2)
அது தானே செய்யும் நெஞ்செங்கும்-ஆட்சி
பணி நாளும் செய்தே உழைத்தென்றும்  நம்மை 
உயர்வாக்கத் தன்னைத் தருவாரே தந்தை 
சுமை தாங்கி போலே தான் அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை




Saturday, April 2, 2022

அன்னை போல்-வந்து(என்னை யாரென்று எண்ணி எண்ணி) **

அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(2)
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

என்றும் நமக்காக உயிர் வாழும் அவள் பாசமாய் 
நமக்காக செய்யும் த்யாகம் எழும் நேசமாய்
(2)
தனக்காக அவள் கொள்வாள் பேராசையாய் (2)
அது பிள்ளை மேல் காட்டும் உயர் பாசமாம் 
(Very Short Music)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

அன்னை மடி-என்ற இடம்-நாடி அடைந்தால் அம்மா 
எனும்-வார்த்தை தனைச்-சொல்லி அழுதால் அம்மா 
(2)
இதம் என்னும் தேன்-பூசி அணைப்பாள் அம்மா (2)
ஊற்றாகும் அவள் அன்பின் பேர் என்னம்மா ?
(VSM)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
(Music)

என்றும் கண்-காணும் ஒரு-தெய்வம் தாயில்லையா அவள் 
தரும்-பாசம் போலொன்று ஏதோ-அய்யா 
(2)
அவள்-பாதம் நாம்-தங்க இடமல்லவா (2)
அதன்-மேலும் ஒரு-வீடு வேறெதய்யா 
(VSM)
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார்
அழும்குரல்-கேட்கும் முன்னர்-வந்து தாலாட்ட  யார்
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
நாம் மண் பூசி அலைந்தாலும் சேயல்லவா 
என்றாசை முத்தாடும் தாயல்லவா 
அன்னை போல்-வந்து  அள்ளி-அள்ளி யார் ஊட்டுவார் ..