Thursday, July 25, 2024

11.வான் கொள்ளாது(நீ என்னென்ன சொன்னாலும்)-Appaa

 

வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியா..த உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு பிறகு
(sm)

உந்தன் நினைவுகள் மனதினில் பிறந்து (2)
எந்தன் கண்கள் கொஞ்சம் அழுகையில் நனைந்து (2)
நெஞ்ச உணர்வினில் அமுதெனக் கலந்து (2)
உந்தன் மகன்-மனம் புலம்புது கரைந்து..
புலம்புது கரைந்து..
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
(இசை)2

என்னை உலகினில் சிறப்புற நடத்தி (2)
எந்தன் நலத்தினில் தன்-மனம் இருத்தி (2)
தன்மெய் களைத்திட உழைப்பினில் வருத்தி (2)
ஐயே இருந்தனை நாட்களைக் கடத்தி நாட்களைக் கடத்தி
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
(இசை)3

உன்னை தமிழினில் கவிபல புனைந்து
உந்தன் திருதரன் படித்தனன் முனைந்து 
அந்நல் திறத்தினை பலபடி புகழ்ந்து
அய்யே உரைத்திட வா மண்ணில் பிறந்து  
மறுபடி  பிறந்து  
வான் கொள்ளாது நீ தந்த உயர்வு
நான் சொன்னாலும் புரியாத உணர்வு
ஓர் சொல்லாலே நீ தந்த உறவு 
வேறெல்லாமென் அப்பாவின் பிறகு
உறவு.. பிறகு

No comments:

Post a Comment