Wednesday, July 24, 2024

31.எந்தன் இதயத்தின் உள்ளே Tune:தங்கப்பதக்கத்தின் மேலே-AMMA31-APPAA10


எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
ஆ...
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

அன்றைக்கு இன்றைக்கு நாளைக்கு என்று காலக் கணக்கைக் கடந்து (2)
பல கோடி ஜன்மம் தாண்டி என்னில் என்றும் இருப்பது ஒன்று (2)
அதனில் அமிழ்ந்து அதனில் மகிழ்ந்து மயங்கி நின்றேனே
அதனை அன்னை தந்தை நினைவு என்றறிந்தேனே
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)

போதாது போதாது என்று மனது என்னில் திளைப்பது என்ன (2)
இரவான பிறகும் தூக்கம் துறந்து உள்ளில் திளைப்பது என்ன (2)
பசிக்கு உணவு வயிறு நிறைய இதம் பிறக்காதோ
அன்னை தந்தை அன்பு மனதில் சுகம் கொடுக்காதோ
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா
(இசை)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
(SM)
சித்தாடும் பெற்றோரின் அன்பு நினைவைச் சொல்லி அழைப்பது என்ன 
எந்த வார்த்தை வரியும் சொல்லத் திகைத்து தோல்வி அடைவது என்ன (2)
கூறும் உதட்டில் ஊறும் அமுதை சொல்லிடச் சொல்லேது (2)
மகனாசையாக அம்மா அப்பா என்றிடும்போது
மகனாசையாக அப்பா அம்மா என்றிடும்போது
எந்தன் இதயத்தின் உள்ளே
ஒரு அச்சு பதித்தது போலே 
நிற்கும் அன்பு நினைவுகளாலே
மனம் தன்னில் நிறைந்திடும் அப்பா
என்னை கொஞ்சி அணைத்திடும் அம்மா

ஆ..




 

No comments:

Post a Comment