Tuesday, July 2, 2024

32.யாரு வேறிங்கு கூறு ( நாலு பேருக்கு நன்றி ) **

 

விருத்தம்
உலகத்தின் உயிருக்கெல்லாம் தாயைப்-போல் யாருமில்லை
நான் ஒருவனாய் உரைக்கவில்லை இதற்கு ஓர் மறுப்பு இல்லை
என் அன்னையே என்று தாளில் உவந்து நீ புகுந்து கொள்ள
உனக்கொரு பந்தம் அன்னை .. எவருக்கும் இறைவன் தந்தான் 
நீ-கூறு வே..றிங்கு யாரு
__________________________________

யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு (2)
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
உனக்கு ஒன்றும் எனக்கு ஒன்றும்  இறைவன் உலகினில் இருந்து 
அநுதினமும் வழங்கியதே அனைத்தும் அன்னை என்று 
பார்த்துப் பார்த்தே யாவும் செய்யும் தாயின் உள்ளம் என்றும் ஓடும் (2)
சொந்தமாகும் பிள்ளை பின்னால் அந்த தாயே தெய்வம் ஆகும்
யாரு வேறிங்கு கூறு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு
(MUSIC)
துன்பத்திலே நீ-அழுதால் வந்தேன் என்பது-தாயே
பக்கத்திலே தானிருக்கேன் கண்ணே என்பதும் தாயே
வாடும்போது அவளே வந்தாள்  வாழும் வாழ்வும் அவள் தான் தந்தாள் (2)
 நன்றி சொல்லப் போகும் போது மௌனத்தாலே ஆசி சொல்வாள்
(PAUSE)
நீ கூறு வேறிங்கு யாரு
யாரு வேறிங்கு கூறு நீ கூறு வேறிங்கு யாரு
தாயைப்-போல அலாதி-ப்ரேமை ஊட்டிக்-கொஞ்சித் தூக்கிக்-கொள்ள 
யாரு-வேறிங்கு கூறு..நீ கூறு வேறிங்கு யாரு




No comments:

Post a Comment