Showing posts with label ஆண்டவன் முகத்தைப் பாக்கணும். Show all posts
Showing posts with label ஆண்டவன் முகத்தைப் பாக்கணும். Show all posts

Sunday, June 19, 2016

3 ஆண்டவன் கூட அப்புறம்(ஆண்டவன் முகத்தைப் பாக்கணும்)




ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(2)
அப்பா-சாமி என்று-படிச்சேன் அந்த-படிப்பினையே கடைப் பிடிச்சேன்
(2)
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(MUSIC)
குணமிருந்தால்-எந்த குறையுமில்லே எனும்-உந்தன் வாழ்க்கையப்பா 
நீ பதவியிலேயும் பதவிசைக் காட்டி வாழ்ந்தது பாடமப்பா 
(1+SM+1)
படிப்பால்-இல்லை பணத்தால்-இல்லை குணத்தால்-மேன்மை என்ற அப்பா
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு-அப்புறம்
(MUSIC)
நண்பர் ன்றே பலர்-எனக்கிருந்தும் நீ-அதில் முதல்வன் அப்பா 
தலைவன் என்றே இருப்பினும்-நீயோ முழுமுதற்-தொண்டனப்பா 
(1+SM+1)
பழுதாய்-அல்ல முழுதாய்-என்னை ஆக்கிய-பெருமை உனக்கு -அப்பா 
ஆண்டவன்-கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்
(MUSIC)
ஒவ்வொரு தந்தையும் இறைவன் எ-ன்பது ஒருநாள் விளங்குமப்பா
பலமாய் விளங்கிய் தந்தையைப்பேணல் பிள்ளையின் கடனல்லவா
(SM)
ஒவ்வொரு பிள்ளைக்கும் இறைவன் எ-ன்பது அவரவர் கொண்ட-அப்பா 
அவரவர் தந்தையைப் பேணுதல்போற்றுதல் அவர்பெற்ற வரமல்லவா

உயர்வே தந்து உயிரை தந்து வளர்த்தது தந்தை தானல்லவா
ஆண்டவன் கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்
அப்பா சாமி என்று படிச்சேன் அந்த படிப்பினையே கடைப் பிடிச்சேன்
ஆண்டவன் கூட அப்புறம் நான் வணங்கிடும் அப்பாவுக்கு அப்புறம்