Showing posts with label சோதனை மேல் சோதனை. Show all posts
Showing posts with label சோதனை மேல் சோதனை. Show all posts

Friday, December 11, 2015

சென்னைக்கினி வான் மழை (சோதனை மேல் சோதனை)




சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி


(1+Short Music+1)
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி (2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

எங்கும் பல வீடு-மட்டும் ஊரானது
அதில் வெள்ளம்-புக ஊர்-முழுக்க நீரானது
(2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

நீரோட்டம் இல்லையென்றே மக்களும் வேண்ட
நீர் பெரும்-கோரம் புரிந்து-அதன் வேகத்தைக் காட்ட 

(2)
பரிதாபம் கண்டதற்கே இதயங்கள் நிற்க
ஐயோ அனுபவித்த பேர்-கதியை என்னென்று சொல்ல
ஓரு -நாளும் வான் இது-போல் பொழிந்ததுமில்லை
அந்தத் திருநாளை ஏன்-கொடுத்தாய்ச் சென்னையைக் கொல்ல
 

சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி

(MUSIC)
 
“இறைவா ..! காஞ்சுப் போன நிலத்துக்காக எல்லோரும் உன்னிடத்தில் மழை-வரம் கேட்டோம், ஆனா நிலமே கடலாப் போய்ட்டா …! உலகத்து ஜனங்கள்ல சில-பேர் தவறுகள்-பல செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதுக்காக எல்லாருக்கும் தண்டனை தந்தா அந்த கொடுமைக்கு யாரால ஞாயம் காண முடியும்”

ஊர் வாடச் சென்னைக்குப் பேய் மழை வந்தது
அது என்ன பாடம் தன்னைச்-சொல்ல ஊரழித்தது. 

(1+sm+1)
புரியாமல் நல்-மனங்கள் பல-வாடுது
அதன் உள்-நோக்கம் காண-ஓலப் பண்-பாடுது
அடி-வாங்கித் திருந்த-பிள்ளை போலா ஐயா
இடி-வாங்கி வருந்த-சென்னை தானா ஐயா
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி