Showing posts with label சென்னை வெள்ளம். Show all posts
Showing posts with label சென்னை வெள்ளம். Show all posts

Sunday, December 27, 2015

இருந்ததெல்லாம் கொடுத்தார்(கொடுத்ததெல்லாம் கொடுத்தான்)




இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(2)
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(MUSIC)
மண்ணில்-நின்ற குடிசையெல்லாம் நீர்-அடித்துச் செல்லக்-கண்டார்
(1+Short Music+1)
காலையில்-தான் வாழக்-கொண்டார் மாலையிலே வீழக்-கண்டார் 
அவர்கொண்ட-வீடு வெறும்-ஓலைக் கொம்பு அதுகூட-இன்று அவருக்கில்லை 
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(MUSIC)
படைத்தவன்-மேல் பழியைச்-சொல்லி அமர்ந்திருந்தோர் யாரும்-இல்லை 
கிடைத்ததெல்லாம் கொடுக்க-வந்தார் கொடுப்பதற்கே தெருவில்-நின்றார்
விரைந்தோடி-ஓடி பலகோடி-கோடி கொடுப்போர்க்கு-பேரில் ஆசை-இல்லை
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
(MUSIC)
இல்லை-என்றோர் வார்த்தையொன்றே என்றுமில்லை இல்லை-என்றார்
(1+Short Music+1)
துடித்து-வந்தே துயர்-துடைக்கும் அவருக்கிறை அருள்-இருக்கும் 
எதுவேண்டும்-சொல்லு எனக்கேட்டு-செய்த அவர்-சேவை மேலோர் பூஜை-உண்டோ
இருந்ததெல்லாம் கொடுத்தார் யார்-பேருக்காகக்-கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்
ஒருத்தர்-வந்தா கொடுத்தார் இல்லை ஊரில்-யாரும் கொடுத்தார்


நான்-பாட்டுப் பாடி(தாலாட்டுப் பாடி)





நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா.. 
நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(1+MUSIC+1+MUSIC)
சிங்காரச்-சென்னை இல்லாமல்-இங்கே தண்ணீரில்-நின்றோமே கன்னையா
(2) 
பேயாக ஓயாத மழை-பெய்ய-வானம் தரைவீழச் செய்தாயே கன்னையா
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(MUSIC)
போதாது-போதாது என-உன்னை மழை-கேட்டோம் ஆனாலும் இது-என்ன கண்ணா 
நூறாண்டில் வரலாறு காணாத மழை-தந்தாய் இதில் சென்னை முழுகட்டும் என்றா
கண்ணா 
இதில் சென்னை முழுகட்டும் என்றா
கடலினிலே துயில்பவன்-நீ மனிதனிடம் அதுபோல் திறமையில்லை
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
(MUSIC)
அய்யா-உன் நெஞ்சம்-கல் அதனாலே கோவில்-உள் கல்லாக உருச்செய்து தானே 
அழகாகக் குடி-வைத்தார் அந்நாளில் என்-முன்னோர் உணர்ந்தேனே அதை இன்று நானே
மனிதன்-என்றால் புரிந்திருக்கும் இங்கிருந்தால் நிலைமை தெரிந்திருக்கும்
நான்-பாட்டுப் பாடி நாளாச்சு-என்று நீ-பாடச் சொன்னாயோ கன்னைய்யா 
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா
எனை நீ-பாடச் சொன்னாயோ கன்னையா

Saturday, December 12, 2015

சொர்க்கத்தில் (சொர்க்கத்தில் கட்டப்பட்ட)


வெள்ளத்தில் ஓலைக் குடிசையும் அடித்துச் செல்லப்பட்ட ஏழையின் ஓலம்
______



சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(1+SM+1)
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை 

நானொரு ஓலைவீட்டுப்பிள்ளை 
(2)
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

உள்ளத்தை முட்டும்-துன்ப வெள்ளங்களும் எனக்கு
ஐயயோ ஏற்கனவே பலப்பல இருக்கு
சென்னைக்கு வெள்ளம்-என்று இன்னும்-ஒண்ணு புதுசு
அய்யா தந்து-கெடுத்தாயே என்னே உந்தன் மனசு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி.. வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

என்னத்தைச் சொல்லி-அழ நான்-கொண்ட-வீடு
ஓலைக்குள்-ஓலைப் பின்னல் தான்-அதன் ஓடு
 

என்னைக்கும் ஏழைக்குத்தான் தந்தாய் பெரும்பாடு 
(1+sm+1)
ஐயா அரண்மனை வீட்டினில்-பார் செல்லாதுந்தன் பீடு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

வெள்ளத்தின் நாசம்-கொண்டு சோகத்தில் துடிக்கும்

 ஏழை-என் கோபம்-தன்னைக் காட்டியே புலம்ப 
 ஞாலத்தில் தெய்வம்-ஒன்று தான்-உண்டு எனக்கும் (2)
உன் பொன்மலர் பாதமன்றி  எது-வந்து  தடுக்கும்
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 

சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை நானொரு ஓலைவீட்டுப்பிள்ள
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி (2)

ஸ்வாமி ஓ ஸ்வாமி எந்தன் ஸ்வாமி



Friday, December 11, 2015

சென்னைக்கினி வான் மழை (சோதனை மேல் சோதனை)




சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி


(1+Short Music+1)
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி (2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

எங்கும் பல வீடு-மட்டும் ஊரானது
அதில் வெள்ளம்-புக ஊர்-முழுக்க நீரானது
(2)
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
(MUSIC)

நீரோட்டம் இல்லையென்றே மக்களும் வேண்ட
நீர் பெரும்-கோரம் புரிந்து-அதன் வேகத்தைக் காட்ட 

(2)
பரிதாபம் கண்டதற்கே இதயங்கள் நிற்க
ஐயோ அனுபவித்த பேர்-கதியை என்னென்று சொல்ல
ஓரு -நாளும் வான் இது-போல் பொழிந்ததுமில்லை
அந்தத் திருநாளை ஏன்-கொடுத்தாய்ச் சென்னையைக் கொல்ல
 

சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி

(MUSIC)
 
“இறைவா ..! காஞ்சுப் போன நிலத்துக்காக எல்லோரும் உன்னிடத்தில் மழை-வரம் கேட்டோம், ஆனா நிலமே கடலாப் போய்ட்டா …! உலகத்து ஜனங்கள்ல சில-பேர் தவறுகள்-பல செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அதுக்காக எல்லாருக்கும் தண்டனை தந்தா அந்த கொடுமைக்கு யாரால ஞாயம் காண முடியும்”

ஊர் வாடச் சென்னைக்குப் பேய் மழை வந்தது
அது என்ன பாடம் தன்னைச்-சொல்ல ஊரழித்தது. 

(1+sm+1)
புரியாமல் நல்-மனங்கள் பல-வாடுது
அதன் உள்-நோக்கம் காண-ஓலப் பண்-பாடுது
அடி-வாங்கித் திருந்த-பிள்ளை போலா ஐயா
இடி-வாங்கி வருந்த-சென்னை தானா ஐயா
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி
என்னைக்குமே துளியுமதை தங்காது பூமி
சென்னைக்கினி வான்-மழை போதுமடா சாமி


Wednesday, December 9, 2015

மௌனமே பாஷையாய்(மௌனமே பார்வையால்)







விளம்பரமோ தன்னலமோ கருதாமல், நாம் நலம் தானே நமக்கு என்ன என்று வீட்டிற்குள் இருந்து கொண்டு, விளம்பரத்துக்காக வார்த்தைகளால் மட்டும் சேவை (Lip Service ) செய்யாமல், களத்தில் (கடலில்..!) இறங்கி சேவை செய்த யாவரையும் வணங்கி இந்தப் பாடலை அவர்க்கு அர்ப்பணம் செய்கிறேன்…!
________________________


மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால் இல்லை கைகள் பேசல்-கேளீர்
(1+SM+1)

எள்ளத்தனை..யும்-யார் செய்தது-என்..றே-பேர் சொல்லி..டாமல்-செய்தல் அறமாகும் அறமாகும்
(Short Music)
எள்ளத்தனை..யும்-யார் செய்தது-என்..றே-பேர் சொல்லி..டாமல்-செய்தல் அறமாகும்
அங்கம்-முழுதும் நீர் வந்து-முழுக இவர்-சென்று செய்த-பணி இறை-யாகம்
இவர் முன்னர்-சிறுமதிகள் இரையாகும்
ம் ..ம் ..மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால்-இல்லை கைகள் பேசல்-கேளீர்
(MUSIC)

இன்னும் தருவேன்-நான் வந்து-தருவேன்- வே..றென்ன வேண்டும்-என்னும் மொழி-பேசும் மொழி-பேசும்
(Short Music)
இன்னும் தருவேன்-நான் வந்து-தருவேன்- வே..றென்ன வேண்டும்-என்னும் மொழி-பேசும்
சின்னஞ்சிறுவர் முதல் மூத்தவர்-என பல வயதின் இவரைத்-தொழ பவம்-போகும்
நிஜ சேவை-செய்பவர்க்கு இது-பொருந்தும்
ம் ..ம் ..மௌனமே பாஷையாய் இவர் சேவை செய்தல் காணீர்
கேளுமே வார்த்தையால்-இல்லை கைகள் பேசல்-கேளீர்



முதல் பக்கம்

கடல்-போல் மழை பொழிந்தான் (தரை மேல் பிறக்க வைத்தான்)






உலகத்தில் ப்ரளயம் இதுதானோ வெள்ளத்தின் தாக்கம் கொலை தானோ
அழிவு-தன் வேட்கை அடங்காதோ *சிவனார் கூத்தும் இது தானோ
________________________
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
(2)
கடல்-போல் மழை-பொழிந்தான்
(MUSIC)

கட்டிய-துணியும்  உயிரும்-கொண்டே மற்றவை-இழந்தவர் முன்னே
அலைகடல்-போலே தரைமேல் மழை-நீர் நாட்டியம்-ஆடிய பின்னே
கொஞ்சம்-விடாமல் பேயாய்ப்-பொழிந்தால் அதற்குள் எங்கள்-வீடு (2)
நடந்தா-விலகும் கிடந்தே-முழுகும் அதுபோல்-எங்கள் வாழ்வும்
பொது தான் இஃது யார்க்கும்

(Short Music)
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை
கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
(MUSIC)

கடலே-தரையில் பயணம்-போனால் தரைமேல் நடப்பது யாரோ
தணியாப்-பசியால் உலகம்-முழுகப் பெய்யும் மழை-ஓர் பேயோ
ஒருநாள் மழை-தான் அதற்கா என்பார் இங்கிருந்..திருந்தால் புரியும் (2)
ஒரு-மழைத் துளியில் ஒரு-கடல் எழுந்தால் ஊரென்ன உலகே முழுகும்
பலப்-பல உலகே முழுகும்
(Short Music)
கடல்-போல் மழை-பொழிந்தான் சென்னையை
கண்-மூட முழுக-வைத்தான்
உடல்-மேல் உயிர்-மட்டும்-தான் மற்றதைக் கண்காண விழுங்கச்-செய்தான்
கடல்-போல் மழை-பொழிந்தான்





*ஊழித் தாண்டவம்

முதல் பக்கம்
___________