Showing posts with label சொர்க்கத்தில் கட்டப்பட்ட. Show all posts
Showing posts with label சொர்க்கத்தில் கட்டப்பட்ட. Show all posts

Saturday, December 12, 2015

சொர்க்கத்தில் (சொர்க்கத்தில் கட்டப்பட்ட)


வெள்ளத்தில் ஓலைக் குடிசையும் அடித்துச் செல்லப்பட்ட ஏழையின் ஓலம்
______



சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(1+SM+1)
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை 

நானொரு ஓலைவீட்டுப்பிள்ளை 
(2)
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

உள்ளத்தை முட்டும்-துன்ப வெள்ளங்களும் எனக்கு
ஐயயோ ஏற்கனவே பலப்பல இருக்கு
சென்னைக்கு வெள்ளம்-என்று இன்னும்-ஒண்ணு புதுசு
அய்யா தந்து-கெடுத்தாயே என்னே உந்தன் மனசு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி.. வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

என்னத்தைச் சொல்லி-அழ நான்-கொண்ட-வீடு
ஓலைக்குள்-ஓலைப் பின்னல் தான்-அதன் ஓடு
 

என்னைக்கும் ஏழைக்குத்தான் தந்தாய் பெரும்பாடு 
(1+sm+1)
ஐயா அரண்மனை வீட்டினில்-பார் செல்லாதுந்தன் பீடு
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
(MUSIC)

வெள்ளத்தின் நாசம்-கொண்டு சோகத்தில் துடிக்கும்

 ஏழை-என் கோபம்-தன்னைக் காட்டியே புலம்ப 
 ஞாலத்தில் தெய்வம்-ஒன்று தான்-உண்டு எனக்கும் (2)
உன் பொன்மலர் பாதமன்றி  எது-வந்து  தடுக்கும்
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 

சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி
மாளிகை மாடம் கொண்ட மன்னன் இல்லை நானொரு ஓலைவீட்டுப்பிள்ள
சொர்க்கத்தில் ஏன்-உனக்கு வேலை 
சாமி…! வெள்ளத்தில் வாடுதிந்த பூமி (2)

ஸ்வாமி ஓ ஸ்வாமி எந்தன் ஸ்வாமி