Tuesday, April 5, 2022

சுமை தாங்கி போலே(சுமை தாங்கி சாய்ந்தால்)

 

சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை 
சுமை தாங்கி போலே தான்-அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை
(MUSIC)

அறிவாளியாகும் தன் பிள்ளை என்றே (2)
பல கல்வி தேடிக் கொடுப்பாரே தந்தை 
விலை-கோடிக் கோடித் தந்தாலும் ஈடு
இணையும் இராது அவர் அன்பின் மேரு 
சுமை தாங்கி போலே தான் அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை 
(MUSIC)

அவர்-பாதம் ஒன்றே அருளாதோ-மாட்சி (2)
அது தானே செய்யும் நெஞ்செங்கும்-ஆட்சி
பணி நாளும் செய்தே உழைத்தென்றும்  நம்மை 
உயர்வாக்கத் தன்னைத் தருவாரே தந்தை 
சுமை தாங்கி போலே தான் அன்புத் தந்தை
அவராலே தானே பெறும் பண்பைப் பிள்ளை




No comments:

Post a Comment