Showing posts with label என் அன்னை செய்த பாவம். Show all posts
Showing posts with label என் அன்னை செய்த பாவம். Show all posts

Tuesday, December 8, 2015

நம் சென்னை செய்த பாவம் (என் அன்னை செய்த பாவம்)

சென்னை வெள்ளம்




நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-பூண்டது
(1+SM+1)
நம் சென்னை-செய்த பாவம்..
(SM)

 நம் ஆசை-என்ற பாவம் பல வீட்டைச் செய்தது
அதைக் களைய-நமக்குப் பரிகாரம் வெள்ளம்-என்பது
கடவுள் செய்தது

நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-கொண்டது
நம் சென்னை-செய்த பாவம்..
(MUSIC)

அதற்கெனவும் இதற்கெனவும் இடம் பிடித்தோமே
மழை நீருக்கு-ஓர் தடம்-கொடுக்க மறுத்து-விட்டோமே
மழை இல்லையே என்று-தினம் ஏங்கிய நாமே
அது வந்த-உடன் பிடிக்கக்-குடம் உடைத்து-நின்றோமே
பைத்தியம் நாமே
நம் சென்னை-செய்த பாவம்….
(MUSIC)

வீட்டிலெங்கும் சமுத்திரம்-போல் நீரைக்-கொண்டோமே
அதில் ஒரு-துளியும் பயனில்லையே பருகிட-நாமே
பெரிய-க்ரௌண்டில் வீடு-மட்டும் நிலமும்-இல்லையே
மழை வந்த-போது வீட்டுக்குள்-ஓர் நலமும் இல்லையே
நம் சென்னை-செய்த பாவம் வான் மண்ணில்-வந்தது
ஓர் இழவு-வீட்டுக் கோலம்-ஓர் நொடியில்-பூண்டது