Showing posts with label Geetha Gopalakrishnan. Show all posts
Showing posts with label Geetha Gopalakrishnan. Show all posts

Tuesday, December 26, 2017

2 நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு(அவன் நினைத்தானா இது நடக்குமென்று)



நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(1+SM+1)
அவன் மடி-புகுந்தே-உன் வலி-மறந்து
மடி-புகுந்தே-உன் விதி-கரைந்து
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
உந்தன் மாபெரும்-நெஞ்சுரம் யார்க்கு-வரும் 
அது கோழையின்-நெஞ்சிலும் வீரம்-தரும்
(2)
என்றும் பாண்டுரங்கன்-பேர் கூறிவரும் 
உன் வாழ்வினுக்கீடாய் ஏது-தவம்
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
அன்று எங்கிருந்தோ எமைத் தேடி-வந்தாய் 
வந்து வாழ்க்கையில் கீதையின் சாரம்-தந்தாய்
(2)
நல்ல பாடம்-தந்தாய்-நீ மெய் விடுத்தாய் 
பலர் வாழ்ந்திருப்பார் அதை நெஞ்சில்-கொண்டு
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
(MUSIC)
உன்னைப் பார்ப்பவர் மனதில் கசிவெடுக்க 
உடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க
பார்ப்பவர் மனதில் கசிவெடுக்க 
உடன் சோகத்தில் ஆழ்ந்து-தன் நிலை-மறக்க
 உன்னை ஆற்றிடவே அவர் வந்திருக்க 
நீ தேற்றி நின்றாய் உந்தன் முகம் சிரிக்க
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)
அவன் மடி-புகுந்தே-உன் வலி-மறந்து
மடி-புகுந்தே-உன் விதி-கரைந்து
நீ இருப்பாயோ இனி அமைதி கண்டு (2)




Monday, December 18, 2017

1 நோய் சென்று ஓடி நீ தேற வேண்டும்(தாலாட்டு பாடி)




நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(1+SM+1)
(MUSIC)
கண்ணாளர் உன்னைக் கண்ணாகக் கொண்டே –
இமைபோலக் காத்தாரே அம்மம்மா
(2)
சேயாக நீயாகத் தாயாக-மாறி
சீராட்டி-நின்றாரே அம்மம்மா
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(MUSIC)
சோராது கூறாது ஒருபோதும்-ஓயாது உனைப்-பார்த்துப் பணி-செய்தார் தாயே
சுமையாக-நீயில்லை எனச்-சொல்லி அவர்-ஆற்றும்
அத்-தொண்டு உயர்-யோகத் தீயே 
அம்மா.. !
அவர் ஏற்றும் உயர்-யோகத் தீயே
இறைவனை-ஏன் எரிக்கவில்லை 
அவன்-மனமோர் அப்பா கல்லின்-மலை
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா
(MUSIC)
அன்பான-சொந்தங்கள் அபிமான-உள்ளங்கள் 
எல்லார்க்கும் பல-உண்டு தாயே 
அவையாவும் கொடுக்காத இதம்-தன்னை நனி-பெற்றாய் 
கண்ணாளன்- வடிவாக நீயே
அரும்-பெரும்-தாய் அவர்-உனக்கும்
தாய் வடிவாய் பிள்ளை எவர்க்கிருக்கும் 
நோய் சென்று ஓடி நீ-தேற வேண்டும் தாளாத அவர்-தாபம் அம்மம்மா
மனம் தாளாத அவர்-தாபம் அம்மம்மா 
போகாத அவர்-தாபம் அம்மம்மா