Saturday, April 30, 2016

10. என் தாய் வடிவில்(ஒரு தாய் வயிற்றில் பிறந்த-உரிமைக்குரல்)




என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(2)
எந்த கோவிலிலும்-உள்ள கருவறையில் அன்னை அவள்-பதம்-தான் நின்று அருள்-கொடுக்கும்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
காலை எழும்-போதே அன்பைப் பாலாக்கி பான-அமுதூட்டுவாள்
காலைப் பிடித்தந்த இரவில் நான்-தூங்க கானமழை தூவுவாள் 
உண்டு-நீ தூங்குவாய் என்று-நான் கூறினால் 
கண்ணே உந்தன்-பின்னே யாவும்-என்றே கூறுவாள்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
உடலின் உயிர்-கூட காலம் வரும்போது உடலைப் பிரிகின்றது 
என்றும் தாயன்பு பிள்ளை என்னுயிரில் இணைந்து தொடர்கின்றது
என்-மகன் மன்னவன் என்று-கொண்..டாடுவாள் 
பிள்ளை நல்ல-பிள்ளை என்று-என்னைப் பாடுவாள்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
(MUSIC)
கண்ணை-மறைக்கின்ற நீரை-மையாக்கி கவியை நான்-பாடலாம் 
தன்னைக் கொடுத்தென்னை அன்னை-வளர்த்திட்ட கதையை அது-கூறலாம் 
(2)
அன்னையின் முழுதினை சொல்லுமா என்-திறம் 
அம்மா உந்தன்-முன்னால் எந்தன் சொல்-எம்..மாத்திரம் (2)
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்
எந்த கோவிலிலும் உள்ள கருவறையில் அன்னை அவள் பதம் தான் நின்று அருள் கொடுக்கும்
என் தாய்-வடிவில் இறைவன் வாழ்ந்து-வந்தான் 
கொஞ்சம் அதை-நினைத்தால் நெஞ்சம் நெகிழ்ந்து-அழும்



No comments:

Post a Comment