Saturday, May 7, 2016

12. அம்மம்மா (அம்மம்மா தம்பி என்று நம்பி)





அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(1+SM+1)
தாயன்பு பிள்ளை-எக்க..டையில்-பெறுவான் (2)
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ (2)
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(MUSIC)

கண்ணில்-வைத்து காத்திடுவாள் பிள்ளை-முகம் பார்த்திருப்பாள்
அன்பினுக்கு அன்னை-எல்லைக் கோடு
அவள் அன்பு-முகம் வந்து-இதம் தந்தணைக்க..வில்லையெனில்
வந்திருக்கும் பிள்ளைக்குப்-பல் கேடு  

(MUSIC)
அல்லும் பகலுமவள் பிள்ளை என்னலத்தை மட்டும்-கண்டாளே
என்றும் தன்னலத்தின் நினைப்பை ஒதுக்கி-அவள் பிணியைக் கொண்டாளே
(2)
இனி யார்-வருவார் அவள்-போல் தருவார் (2)
இன்று நான்-காணும் போகங்கள் கொஞ்சம் அல்லவே
ஓர் துளிகூட தாயன்பு போலதில் இல்லையே
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா

 (MUSIC)
அன்னையன்று தந்த-அன்பு ஒன்..றன்பின் ஒன்று-வந்து
ஓடுதெந்தன் மனத்திரையில் காட்சி
அவள் தன்னின்-அன்பைக் கொண்டவளை ஜோடி-என்று  தந்ததமைக்கு ..என்னுடனே வாழும்-உண்மை சாட்சி 
(MUSIC)
கண்ணில் நீர்-பனிக்க அன்னை சொன்ன-மொழி இன்றும் ஒலிக்கிறது
மண்ணில்-நல்லவனே என்னின்-மன்னவனே என்றே 
இனிக்கிறது
(2)
அவள் பாசக்குன்றோ அன்பின் வாசக் *கன்றோ (2)
ஒரு ராஜாங்கம் எல்லாம்-தரும் அன்பைத் தருமோ
அந்த ராஜபோகம் அன்னைமடி தன்னைத் தருமோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா
தாயன்பு பிள்ளை-எக்க..டை..யில்-பெறுவான்
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன்-தந்தால் வருமா


*கன்று = செடி






No comments:

Post a Comment