Showing posts with label அம்மம்மா தம்பி என்று நம்பி. Show all posts
Showing posts with label அம்மம்மா தம்பி என்று நம்பி. Show all posts

Monday, March 6, 2017

15. உன் நினைப்பில் (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்)








உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
(2)
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோடி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
சோற்றை உண்ணும்-வேளை அங்கே உன்-கை வந்தது
சோற்றை உண்ணும்-வேளை அம்மா உன்-கை வந்தது
போதும் என்ற-போதும் வாயில்-அதுவே தந்தது 
இன்னும் கொஞ்சம்-கண்ணே என்று-அன்பைப் பெய்தது
உனக்கெது இணை கூறேன்  நீ அன்பினில் பல-ஆறே
நினைத்தால் ஏக்கம் எழுதே  ஆ.. படுத்தால் தூக்கம் கெடுதே  
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
 பிள்ளை தூங்கும் நேரம் உந்தன் எண்ணம் வந்தது
சோகம் பந்து-போலும் வந்து-நெஞ்சில் நின்றது
இனி-உந்தன் பரிவேது என்ற-ஏக்கத்தின் முடிவேது
இரவும் பகலும் உனையே ஆ.. நினைத்தால் முடிவும் இலையே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை- எந்தன் நெஞ்சில் பதித்தேன்
(MUSIC)
வாடல் கொண்டு-பிள்ளை இங்கே தனியே-நின்றது
வாடா எந்தன்-கண்ணே என்ற குரலைத் தேடுது
நானழு..தழுதாச்சு என் கண்களும் காய்ஞ்சாச்சு
விரைவினில் வருவேன் அங்கே..ஆ..அதுவரை இருப்பாய் அன்பே
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்
உறவினில் பலகோடி அவை உன்-மடி முன்-தூசி
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-எந்தன் நெஞ்சில்-பதித்தேன்
இடர்-வர உனை-நாடி நான் பெறும்-இதம் பெறும்-கோடி
உன்-மகன் தலை-கோதி நீ தரும்-இதம் பெறும்-கோட
உன்-நினைப்பில் என்றும் இருக்கேன்
அன்னை உன்னை-என்றும் நெஞ்சில் பதித்தேன்



Saturday, May 7, 2016

12. அம்மம்மா (அம்மம்மா தம்பி என்று நம்பி)





அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(1+SM+1)
தாயன்பு பிள்ளை-எக்க..டையில்-பெறுவான் (2)
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ (2)
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால்-வருமா
(MUSIC)

கண்ணில்-வைத்து காத்திடுவாள் பிள்ளை-முகம் பார்த்திருப்பாள்
அன்பினுக்கு அன்னை-எல்லைக் கோடு
அவள் அன்பு-முகம் வந்து-இதம் தந்தணைக்க..வில்லையெனில்
வந்திருக்கும் பிள்ளைக்குப்-பல் கேடு  

(MUSIC)
அல்லும் பகலுமவள் பிள்ளை என்னலத்தை மட்டும்-கண்டாளே
என்றும் தன்னலத்தின் நினைப்பை ஒதுக்கி-அவள் பிணியைக் கொண்டாளே
(2)
இனி யார்-வருவார் அவள்-போல் தருவார் (2)
இன்று நான்-காணும் போகங்கள் கொஞ்சம் அல்லவே
ஓர் துளிகூட தாயன்பு போலதில் இல்லையே
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா

 (MUSIC)
அன்னையன்று தந்த-அன்பு ஒன்..றன்பின் ஒன்று-வந்து
ஓடுதெந்தன் மனத்திரையில் காட்சி
அவள் தன்னின்-அன்பைக் கொண்டவளை ஜோடி-என்று  தந்ததமைக்கு ..என்னுடனே வாழும்-உண்மை சாட்சி 
(MUSIC)
கண்ணில் நீர்-பனிக்க அன்னை சொன்ன-மொழி இன்றும் ஒலிக்கிறது
மண்ணில்-நல்லவனே என்னின்-மன்னவனே என்றே 
இனிக்கிறது
(2)
அவள் பாசக்குன்றோ அன்பின் வாசக் *கன்றோ (2)
ஒரு ராஜாங்கம் எல்லாம்-தரும் அன்பைத் தருமோ
அந்த ராஜபோகம் அன்னைமடி தன்னைத் தருமோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன் தந்தால் வருமா
தாயன்பு பிள்ளை-எக்க..டை..யில்-பெறுவான்
* அது முழுக்காத-பாச வெள்ளம் அல்லவோ
அம்மம்மா அன்னையன்பு-கோடிப் பொன்-தந்தால் வருமா


*கன்று = செடி