Sunday, January 1, 2017

14. இறைவன்-உனை அன்னை-என்று(பரமசிவன் கழுத்திலிருந்து)-அம்மா




இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
(1+SM+1)
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
உலகு-என்னை ஒதுக்கும்-போது உனக்கு-நெஞ்சு கொதிக்கும்
என் முகத்தில்-கொஞ்சம் பயமிருந்தால் உனது-நெஞ்சம் பதைக்கும் 
(2)
அடடா-பார் இருக்கேன்-நான் கலங்காதே என்று 
நானும் கொஞ்சம் தொய்ந்ததுக்கு அன்னை சொன்னது 
அது அன்றே-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
முரண்டி-ஆடும் துர்க்குணங்கள் எனக்கு-என்றும் தோன்றும் இந்த முரடனுக்கும் பரிவு-தந்தாய் உனக்கு-உண்டோ ஈடும்
உனைப்-போலே யாரென்று எனைப்-பார்த்து நீயும் 
உயர்ந்தோன்-நீ நல்லோன்-நீ என்று சொன்னது
அது அன்றே-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு 
(MUSIC)
நீயும்-நானும் பார்த்திருந்தோம் நிறைகள்-ஒன்றைத் தானே
பல குறைகள்-என்னில் தெரியுதம்மா நீ-பிரிந்ததாலே
நீயும்-நானும் பார்த்திருந்தோம் நிறைகள்-ஒன்றைத் தானே 
பல குறைகள்-இன்று தெரியுதம்மா நீ-பிரிந்ததாலே
பித்தா-நீ என-நானே கேலி செய்தபோது
நீ-தாண்டா என்-வாழ்வில் நிம்மதி-என்று 
நீ அன்று-சொன்னது அது இன்றும்-கேட்குது
இறைவன்-உனை அன்னை-என்று எனக்குத்-தந்தது அது-என் பாக்யமா
தாயைப் பறித்துப்-பிரிவு நோயைத் தந்தான் அம்மா-வைத்யமே
அதற்கெங்குள்ளது அதை கொஞ்சம் சொல்லிடு





No comments:

Post a Comment