Thursday, September 23, 2021

வாழ்வாங்கு நீ வாழ்(பூமாலையில்) ** (AMMA,APPAA)

 



ஆ .. ஆ ..
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது
(1+MUSIC+1)
(MUSIC)
அன்னை மென்-மடி நினைவு எப்போதும் ஆ ..
தந்தை-உன் ஆசிகள் கேட்குதெப்போதும் ஆ ..

அன்னை பொன்னடி மென்-மடி போதும்
தந்தை வாய்மொழி ஆசிகள் போதும்
அதன்-மேல் இனிமை உலகில் உளதோ (2)
நினைந்தே இருப்பேன் வரும்-நாள் உலகில் 
அதைத்தான் நினைந்தேன் இது-நாள் வரையில்
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது
(MUSIC)
கொஞ்சும் குளிர்மழைச் சாரலைப் போலும் ஆ 
உங்களின் மென்-குரல் காதினுள் தூறும் ஆ
முதுமை-வரினும் மடியில்-உருளும் (2)
உரிமை தரும்-தாய் தந்தை தெய்வம்
உறவைத் தரும்-தாய் தந்தை தெய்வம்
வாழ்வாங்கு-நீ வாழ்-வாழ்-என உங்கள் சொல்-சொல் சொல்-கேட்குது 
என்ன-பீடு வேறு-உள்ளது என்னப்பா அம்மா-மேலெது

No comments:

Post a Comment