Thursday, December 22, 2022

29.உனது மடியில் புரண்ட-நாட்கள்(உனது விழியில் எனது பார்வை) **

 


உனது  மடியில் புரண்ட-நாட்கள் நெஞ்சில் தோன்றுது (2)
என் நினைவில் இன்றும் இருக்கும் அதுதான் தங்கம் போன்றது 
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

உயர்வென்று ஆயிரம் நன்று எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
உயர்வென்று ஆயிரம் நன்று .. எனக்கென்று வாழ்வில் உண்டு 
தாயுந்தன் அன்பின் முன்னால் அவை என்றும் நிற்குமோ
-பூமியின்-மேலே ஆண்டவன் பேர்-தான் தாயெனக்-கூறுவதோ
-உனைப் போல தெய்வம் வருமோ (2)
-உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது
(Music)

தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
தனக்கென்று வாழ்ந்தது கொஞ்சம் .. குணக்குன்று தாய்மை நெஞ்சம்
அது செய்த த்யாகம் என்றும் தோன்றாது வேறிடம் 
என்-உடல் கொண்ட காயத்தின்-ரத்தம் அவள்-கண் வடிக்கிறது
அது தெய்வம் கொண்ட பிறப்பு (2)
உனது  மடியில் புரண்ட நாட்கள் நெஞ்சில் ஆடுது 
என் வயது குறைந்து உன்னில் இருக்க நெஞ்சம் ஏங்குது அம்மா நெஞ்சம் ஏங்குது



No comments:

Post a Comment