Sunday, August 23, 2026

35.செல்லமே(மௌனமே பார்வையால்)

 
[Pallavi]
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]
[Verse 1]
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன  
அணைப்பதென்ன
சின்னக் கரத்தால் நீ எந்தன் கழுத்தைச் சுற்றி மாலை போல கோ...ர்த் தணைப்பதென்ன 
அந்தக் கடவுள்  தான் தந்த வரமாய்  நான் அந்த கணத்தில் நெஞ்சில் நினைப்பதென்ன
நான் எந்தன் மனதில் என்றும் நினைப்பதென்ன
[vocal ad-lib] ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன

[Instrumental Break]

என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் கழிப்பேனே களிப்பேனே
என்னை விடவே நான் உன்னை நினைத்தே நாள் முழுதும் உன் நினைவில் களிப்பேனே
எந்தன் கண்மணீ நீ தந்த இதத்தில் நான் இன்ப சாகரத்தில் மிதப்பேனே
பேரின்ப சாகரத்தில் மிதப்பேனே
ம்...
செல்லமே என்றுனை நான் காண  எண்ணும் போதே
தாத்துவே என்றெனை நீ தேடி வந்ததென்ன


OTHER SONGS




No comments:

Post a Comment