Thursday, October 30, 2014

2. எங்கே என் தாய் (கண்ணன் வந்தான்)

** Please read this along with the original song **



விருத்தம்
என்பினால் செய்ததில்லை அன்புடலே  தாய்க்கு
கல்லெனக்கும் கசிந்துருகும் அவள்மனமே பாகு
நான்பசித்துப் பொறுப்பாளா தான்ருசித்து உண்பாளா
என்தாயின் அன்புமுகம் எங்கே எங்கே
___________

(MUSIC)
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
(2)
எங்கே என்தாய்..!
(MUSIC)

தேடி எங்கும் காணவில்லை எங்கே என்தாய்
வாடி நானும் துடிக்கின்றேன் எங்கே என்தாய்
(2)
கேட்டிடாமல் தருபவளே அன்பே என் தாய்
கேள்விகளே கேட்காமல் தருவாள் என் தாய்
தர்மம் கொண்ட உருவகமே என்தாய் என்தாய்
தாளாத துயர் தந்து சென்றாள் என்தாய்

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய் எங்கே என்தாய்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்..!

(MUSIC)

ஆறுதலை அளித்தணைக்கும் அவள்பூம் பதம்
என்கவலை மறக்க வைக்கும் என்தாய் முகம்
(2)
முரடன் எனை மகிழ்ந்தணைக்கும் என்தாய் பதம்
மூடன் எனைப் புகழ்ந்தினிக்கும் என்தாய் முகம்
(2)
பகவானின் கருவறைஎன் தாயின் பாதம்
அஞ்சாதே எனகாக்கும் அன்னை பாதம்
அன்னை பாதம் எந்தன் அன்னை பாதம் அன்னை பாதம்
எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய்...!
அம்மா…
அம்மா… அம்மா …!
(MUSIC)

 சிறுமை கொண்டு நான் மறந்து போனபோதும்
அருமை என்று உனைநினைந்தி..டாதபோதும்
 (2)

எனை மழலை என்றுநீவா..தாடுவாயே 
தலையில்வைத்து  நீயும்கொண்..டாடுவாயே
 (2)

உலகினிலே உனைப் பிரிந்து நின்றேன் அம்மா
உன்னைநான் யாரிடத்தில் காண்பேன் அம்மா
 (2)

 அம்மா அம்மா அம்மா அம்மா

எங்கே என்தாய் எங்கே எங்கே என்தாய்
பிள்ளை கண்ணீரில் கேட்கிறேன் எங்கே என்தாய்
எங்கே என்தாய் .. எங்கே என்தாய்...
!


.




No comments:

Post a Comment