Thursday, October 30, 2014

4. இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை)


இன்னுயிர் தந்தாயே(கோதையின் திருப்பாவை-கிருஷ்ண கானம்)

** Please read this along with the original song **



அம்மா..அம்மா அம்மா.. அம்..மா

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)

வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)
இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா
 (MUSIC)

நீ-எனை ஈன்றெடுக்க பெற்றெனைச் சேர்த்தணைக்க
ஊண்-துறந்தே-துயில் துறந்தாய் அம்மா (2)
நானதை உணராமல் ஐயஹோ உன்-சூலில் (2)
மாபெரும் சுமையாக இருந்தேன் அம்மா
நானொரு சுமையாக இருந்தேன் அம்மா
(MUSIC)

தாரணி..யில்-நாளை உன்மகன் பொன்மேனி
கொண்டிட பல்-கசப்பை மருந்தாய் உண்டாய் (2)
உந்தியில் நில்லாமே மந்தியின் குணத்தாலே (2)
உதைத்துனை வதைத்தேனே ஐயோ அம்மா (2) 
 (MUSIC)

உன்-மகன் மலநீரில் உன்-மடி சேறாக 
சந்தனம் போல் அதனை நினைத்தாய் அம்மா 
பொன் மனத்தால்-என்னை அணைத்தாய் அம்மா
காரிருள் வே..ளையில் பயந்து-நான் கூவிட
நானிருக்..கேன்-கண்ணே பொன்னே என்றாய் (2)
(MUSIC)

நாளைக்குப் பார்த்திடுவேன் நன்றியைச் செலுத்திடுவேன்
என்று-நாள் கடத்தி-வந்தேன் நானும் அம்மா
சோம்பி-இ..ருந்த-பாவி நான்-தான் அம்மா
யாரிடம் கூறுவேன் என்ன-எண்ணித் தேறுவேன் (2)
வந்திடுமா மீண்டும் அந்தப் பொன்னாள்
கண்படுமா ஐயோ அன்னை உன்-தாள்

இன்னுயிர் தந்தாயே தன்னுயிர் தந்தாயே
என்னுயிர் நீ-இன்று எங்கே அம்மா (2)
வேதனை அறியாயோ சோதனை புரிவாயோ
என்-அழு..குரல்-கேட்டு வருவாய் அம்மா (2)




No comments:

Post a Comment