Sunday, March 14, 2021

31 புன்மையால் துரியன்(பச்சை மா மலை போல்)

 


புன்மையால் துரியன் வாழ்வில் 
மதி-இழிந்..திருந்தான் தாழ்வில்
மாய்த்ததே அவனைக் காணீர் 
மாதர்தம் துயரின் கண்ணீர் 
(2)
அச்சுதன் துணையில் போரில் 
பாண்டவர் வென்றார் பாரீர்
(2)
கெட்டதை நினைந்த கேடே 
விளைத்ததே துரியன் சாவை 
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
பாரில்-நீ வந்து செல்வாய் 
சாவதும் பிறப்பதற்கே
சதம் என மேனி.. இல்லை 
உறவு உனக்கொருவர் இல்லை 
உன்-நலம் பார்த்துக் கொள்வேன் 
பற்றிடாய் நீ-என் கீர்த்தி

என்று நல் கீதையை 
கண்ணனே தந்து சென்றான் 
(2)
யாவும்-உன்னால் தான் அம்மா
அன்னை பாஞ்சாலி தாயே   


DROUPATHI

இன்னும் பிற


No comments:

Post a Comment