Wednesday, October 12, 2022

28.ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் **

 


ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
(MUSIC)
பிள்ளைகள் உதைத்தும் மிதித்தும் என்றைக்கும் இதத்தைக் கொடுக்கும் (2) 
தாயை  நீ பார் 
என்றென்றும் உழைத்தே இளைத்தும் பிள்ளைக்குச் சிறப்பே கொடுக்கும் 
தந்தையைப் பார்
நிலவுபோல்  தாய் முகம் ஆக்குமே பரவசம் 
வாழ்விலே தைரியம் தந்தை தான் இது நிஜம் 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
 (MUSIC)
சென்றங்கு கண் மூடும் வரைக்கும்  என்றைக்கும் சேய் நன்மை நினைக்கும் (2) 
தாய்மையாகும்
என்றென்றும் பிள்ளைக்கே உழைக்கும் விந்தைக்கு இருக்கும் ஒரே பேர் 
தந்தையாகும் 
அன்புதான் தாய் மனம் தந்தையோ கரிசனம்
கண்டபின் வேண்டுமோ ஆண்டவன் தரிசனம்
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக
தன்னலம் இன்றி நமக்காக எங்கும் வேராறுமே இல்லையே 
ஆண்டவன் வந்தான் நமைக் காத்து நின்றான் 
பூலோக வாழ்வில் தந்தை தாயாக



No comments:

Post a Comment