Showing posts with label ஆளுக்கொரு தேதி வச்சு. Show all posts
Showing posts with label ஆளுக்கொரு தேதி வச்சு. Show all posts

Monday, January 18, 2016

ஆயிரமாய் நிறைகளையே (ஆளுக்கொரு தேதி வச்சு)




விருத்தம்
மகனே இருக்கேன்-நான் கலங்காதே எனவே 
நீ சொல்லும்-மொழி கேட்டிடவே
ஆசை கொண்டேனப்பா
இன்று-மொழி  கேட்டிடவே ஆசை  கொண்டேனப்பா
____________________________________________________

ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(1+SM+1)
அப்பா ஆயினுமோர்-குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
இப்போ நானழுமோர் குறையளித்தாய் நீ-உந்தன் பிரிவால்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
பூமி..யில்-நீ இருக்கிற-நாள் வரையினில்-நான் ஹீரோ 
பூமி-விட்டு போன-பின்னே ஆகிப்புட்டேன் ஜீரோ
ஓயும்போது சாஞ்சுக்கவே தோள்-கொடுக்க யாரோ
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
(MUSIC)
அறிவுரைகள் கொடுக்க-உன்போல் யாராலே ஆகும்
நோகும்போது உன்முகத்தைக் கண்டாலே போதும்
போகும் போகும் எனது நோவும் காணாமல் போகும்
(MUSIC)
என்னிடத்தில் உள்ளதெல்லாம் என்-திறமா கூறு (2)
என்-தகப்பா உன்னறிவுத் தீயின்-முன்னே தூசு (2)
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்..ஆ...ஆ..
புத்தகத்தில்-படித்ததெல்லாம் கக்கிக்கிட்டுத் திரியும்
 பிள்ளைக்கு-நீ சொல்லாமல் எதுவும் என்ன புரியும்
இன்னைக்கு-நீ இல்லாமல் எனக்கு-ஞானம் சூன்யம்
ஆயிரமாய் நிறைகளையே நீ-எனக்களித்தாய் நீ-எனக்களித்தாய்
ஏன் எனைப் பிரிந்தாய்.. ஏன் எனைப் பிரிந்தாய்..
_________

More



Tuesday, December 8, 2015

ஆளுக்கொரு அழிவு-தந்து(ஆளுக்கொரு தேதி வச்சு ஆண்டவன் அழைப்பான்)

 

Original SONG



ஐயோ அடை மழையோ பேயாட்டக் கொலையோ
வான் முட்ட-எழும் நீரலையோ அணை இதற்கி ல்லையோ
முட்ட-எழும் நீரலையோ அணை இதற்கி ல்லையோ
_____________



ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில் அழித்தான்
(1+SM+1)


அய்யா வெறும்-மழைதான் என்றிருந்தேன் கதையையே-முடித்தான்
அய்யா ஒரு கணம் நான் அசந்திருந்தேன் கதையையே-முடித்தான்
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான்
(MUSIC)

பூமியையே கடலெனவே மாத்திப்புட்டான் பாரு
சாமிய-ஏன் எதுக்கு-என்று  கேட்க-இங்கே யாரு (2)
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான்
(MUSIC)

போற-உயிர் உடன்-போனால்  நிம்மதியே ஆகும்
போய்விடாமல் நாசம்-காண யாராலே ஆகும்

கண்ணெதிரே நாசம்-காண யாராலே ஆகும் 
(MUSIC)
கொள்ளி-வெக்கும் செலவு-இல்லே தள்ளிக்கிட்டே-போச்சு (2)
தூங்கிடாமல் சேத்ததெல்லாம் கண்ணெதிரே போச்சு 

தூங்கிடாமல் காத்ததெல்லாம் பாக்கும்போது  போச்சு
பொத்தி-வச்ச இடத்திலெல்லாம் பொத்துக்கிட்டு கிளம்பும்
ஆஆ
பொத்தி-வச்ச இடத்திலெல்லாம் பொத்துக்கிட்டு கிளம்பும்
பிள்ளை-குட்டி எல்லாமும் முழுக வைக்கும் வெள்ளம்
தன்னைச்-சுத்தித் தானாக எழும்பிக்-கிளம்பும் வெள்ளம்
ஆளுக்கொரு அழிவு-தந்து ஆண்டவன்-பொழிந்தான் கணத்தினில்-அழித்தான் ஆண்டவன்-பொழிந்தான்.. ஆண்டவன்-பொழிந்தான்..